search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைச்சர் சம்பத்"

    பிளாஸ்டிக் ஒழிப்பு காரணமாக மூடப்படும் தொழிற்சாலைகளுக்கு அரசு ஊக்கத் தொகை வழங்கும் என்று அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார். #TNMinister #MCSampath
    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு இல்லா மாவட்டமாக மாற்றிட மாவட்ட அளவிலான விழிப்புணர்வு பேரணி தொடக்க விழா கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. கலெக்டர் அன்புச்செல்வன் தலைமை தாங்கினார். அமைச்சர் எம்.சி.சம்பத் கலந்து கொண்டு பேரணியை தொடங்கி வைத்து பேசியதாவது:-

    பிளாஸ்டிக் இல்லாத தமிழ்நாட்டை மாற்ற தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளார். இதனால் பிளாஸ்டிக் பொருட்கள் முழுமையாக அகற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு செயல்பட்டு வருகிறது.

    பிளாஸ்டிக் பொருட்கள் பூமியில் இருந்தால் பல்வேறு பிரச்சனைகளை உருவாக்கும். மேலும் கால்நடைகள் இந்த பிளாஸ்டிக் பொருட்களை சாப்பிட்டால் பல்வேறு நோய்கள் வரக்கூடிய அவல நிலைக்கு தள்ளப்படும். ஆகையால் மக்காத பிளாஸ்டிக் பொருட்களை முழுமையாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இந்த பிளாஸ்டிக் ஒழிப்பு காரணமாக பல தொழிற்சாலைகள் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

    அவ்வாறு மூடப்படும் தொழிற்சாலைகளுக்கு அரசு ஊக்கத் தொகை வழங்கும். மேலும் அவர்களுக்கு பிளாஸ்டிக் அல்லாத மாற்று பொருட்கள் தயாரிப்பதற்கான வழிவகைகள் வழங்கப்படும்.

    மாவட்ட நிர்வாகம் சார்பில் பள்ளி மாணவ- மாணவிகள் பேரூராட்சி நகராட்சி ஊராட்சி உள்ளிட்ட பல்வேறு துறை ஒருங்கிணைத்து இந்த பிளாஸ்டிக் பயன்பாட்டை முழுமையாக ஒழிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பிளாஸ்டிக்கிலான பொருட்களை பொதுமக்கள் பயன்படுத்தாமல் முழுமையாக தவிர்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். #TNMinister #MCSampath
    கடலூர் அருகே அதிமுக பிரமுகரை கொன்ற குற்றவாளிகளை உடனே கைது செய்ய கோரி அமைச்சர் எம்.சி.சம்பத்திடம் மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
    கடலூர்:

    கடலூர் தேவனாம்பட்டினம் மற்றும் சோனாங்குப்பம் பகுதி மீனவர்களிடையே தகராறு இருந்து வந்தது. முன்விரோதத்தை மனதில் வைத்து கொண்டு தேவனாம்பட்டினம் மீனவர்களில் சிலர் சோனாங்குப்பத்துக்கு சென்று அங்கு வெளியில் நின்று கொண்டிருந்த அ.தி.மு.க. பிரமுகர் பஞ்சநாதனை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் பஞ்சநாதன் பரிதாபமாக இறந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனை முடிந்து சோனாங்குப்பத்தில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது. அவரது உடலை பார்த்து குடும்பத்தினர், உறவினர்கள் கதறி அழுதனர்.

    அமைச்சர் எம்.சி.சம்பத், அ.தி.மு.க. நகர செயலாளர் குமரன்,முன்னாள் நகர மன்ற தலைவர் சேவல்குமார், ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி மற்றும் நிர்வாகிகள் பஞ்சநாதனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்கள். குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் என்று பஞ்சநாதனின் உறவினர்கள், மீனவர்கள் அமைச்சரிடம் புகார் செய்தனர். குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மீனவர்களிடம் அமைச்சர் உறுதி அளித்தார்.

    இதேப்போல் முன்னாள் எம்.எல்.ஏ. அய்யப்பன் தலைமையில் கடலூர் மாவட்ட டிப்பர் லாரி உரிமையாளர் சங்க தலைவர் பிரகாஷ், கூட்டுறவு சங்க தலைவர்கள் ஆதிபெருமாள், ரவிச்சந்திரன் மற்றும் ஏராளமானோர் பஞ்சநாதனின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்துக்கு ஆறுதல் கூறினர்.
    ×